தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நாளை களம் இறங்கும் பாரத் பாண்ட் இ.டி.எஃப்! - சிபிஎஸ்இ, பாரத் 22 எக்ஸ்சேஜ் பாண்ட்

சிபிஎஸ்இ, பாரத் 22 எக்சேஞ்ச் பாண்ட் இந்த வரிசையில் பாரத் பாண்ட் இ.டி.எஃப் நாளை களம் இறங்குகிறது.

Bharat Bond ETF
Bharat Bond ETF

By

Published : Dec 11, 2019, 9:20 PM IST

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள பாரத் பாண்ட் இ.டி.எஃப் நாளை செயலுக்கு வரவுள்ளது. பாரத் பாண்ட் இ.டி.எஃப் (Bharat Bond ETF) என்பது பல மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய ஒரு பங்காகும்.

பொதுவாக, பங்குச் சந்தையில் நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்போம். ஆனால், இந்த வகை பாண்ட்களில் பல அரசு நிறுவனங்களின் பங்குகள் பர­வ­லாக்­கப்­பட்­டு, ஒற்றைப் பங்குகளாக மாற்றப்படுகிறது. இதனை 'பாண்ட்' என்று அழைக்கிறார்கள்.

ஒரு பங்கின் விலை குறைந்த பட்சம் 1000 ரூபாய் ஆகும். மேலும் இதன் முதிர்வுக்காலம் மூன்று ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள். பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாகச் செயல்படக்கூடிய அரசு நிறுவனங்களில், நாம் முதலீடு செய்வதால் மிகுந்த நம்பகத் தன்மை வாய்ந்த லாபம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பழைய ஆண்ட்ராய்டு வைத்திருப்பவர்களுக்கு கடைசி அலெர்ட் விட்ட வாட்ஸ்அப்!

ABOUT THE AUTHOR

...view details