தமிழ்நாடு

tamil nadu

விற்பனையை அதிகரிக்க ஆஃபர்களை வாரி வழங்கும் கார் நிறுவனங்கள்

சென்னை: விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வாரி வழங்க தொடங்கியுள்ளன. இதனால் இனிவரும் நாட்களில் வாகனங்களின் விற்பனை படிப்படியாக உயரும் என வாகன விற்பனையாளர்கள் (டீலர்கள்) நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

By

Published : Sep 26, 2019, 11:19 PM IST

Published : Sep 26, 2019, 11:19 PM IST

car

அண்மைக்காலமாக கார், பைக், கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து, தங்களின் தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாகன உற்பத்தியிலும், அதனை நம்பியுள்ள உதிரி பாகம் தயாரிப்பிலும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.

மாருதி சுசூகி கார்கள்

இதனையடுத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக கடுமையான சரிவை சந்தித்துள்ள கார் விற்பனையையை ஊக்குவிக்க அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் நடைபெற்ற 37ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பேடிஎம் ஆஃபர்கள்

அதேநேரத்தில், கார்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி (செஸ்) குறைக்கப்பட்டது. இருப்பினும் பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் கார் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த சூழலில் அடுத்த மாதம் முதல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு பண்டிகைக் கால விற்பனையை அதிகரிக்க தங்களது கார்களுக்கான விலையை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்ட குறைத்து வருகின்றன.

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, நேற்று முதல் குறிப்பிட்ட கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. ஏற்கெனவே அந்நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் கார்களின் விலையை குறைத்துள்ளது. ஆல்டோ, ஸ்விப்ட், செலாரியோ, பலேனோ, இக்னிஸ், டிசயர், எஸ்-கிராஸ், பிரீஸா உள்ளிட்ட கார்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி கார்கள்

அதேபோல், டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தங்களது கார்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கிவருகிறது. ஹரியர் கார்களுக்கு 50 ரூபாயும், ஹெக்சா வகை கார்களுக்கு ஓன்றரை லட்ச ரூபாயும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஹரியர், ஹெக்சா தவிர டிகர், டியாகோ, நெக்சான் கார்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 14 பேர் அமர்ந்து பயணிக்கும் வசதிகொண்ட டாடா விங்கெர் (winger) மாாடலுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

டேட்சன் ரெடி கோல்டு

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா கார்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா கார்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிவிக் கார் இரண்டு லட்ச ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது, சிஆர்-வி, ஹோண்டா சிட்டி, பிஆர் வி உள்ளிட்ட கார்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்

இதையடுத்து ஏராளமான டீலர்கள், முன்பணம் செலுத்தாமல் முழுமையாக மாத தவணையிலேயே கார் வாங்கும் வசதியையும், கேஷ் பேக் ஆப்பர், இணைப்புச் சலுகைகள், இலவச உதிரி பாகங்கள், இலவச எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ், கூடுதல் வாரன்டி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி எடுத்துள்ளனர். இது தவிர குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பேடிஎம் ஆஃபர் என்று கூறி 8000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர், உணவு கூப்பன்கள், ஷாப்பிங் கூப்பன்கள் உள்ளிட்ட கவர்ச்சிகர சலுகைகளும் வழங்கப்படுகிறது.

கார் தயாரிப்பு தொழிற்சாலை

இதுபோன்ற ஆஃபர்களால் வரும் பண்டிகை காலத்தில் கார்களின் விற்பனை கணிசமான அளவுக்கு உயரும் என வாகன நிறுவன அலுவலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது கார்களின் விற்பனை தற்பொழுது முன்னேற்றம் கண்டுள்ளது என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட பின் விற்பனை உயர்ந்திருந்தாலும் பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை குறைக்கும் போது டீலர்கள் தங்கள் லாபத்தை குறைத்து கார்களின் விலையை குறைக்க நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் தொடர்ச்சியாக வாகன விற்பனை வரலாறு காணாத சரிவு குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதால் மக்கள் இதனைக் கூறி வாகனங்களின் விலையை குறைக்க அதிகமாக பேரம் பேசுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கார்கள்

பிரீமியம் பிராண்ட் எனப்படும் உயர்ரக வாகன விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவை பெரிய அளவுக்கு சலுகைகள் ஏதும் வழங்கவில்லை. பொதுவாகவே டிசம்பர் மார்ச் மாதங்களில் வாகன விற்பனை அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த முறையும் டிசம்பர் மாதத்தில் விற்பனை விற்பனை அதிகரித்து சீரான நிலையில் இருக்கும் என்று வாகன விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இடிவி பாரத் செய்திகளுக்கு பேட்டியளித்த சென்னை கார் டீலர்கள் சங்கத்தலைவர் ரமேஷ்குமார், அரசு துரிதகதியில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதால் மக்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் டீசல் கார்களை வாங்க ஆர்வம் காட்டுவது இல்லை. அதேபோல் புதிய மற்றும் பழைய கார்களின் விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால் மக்கள் புதிய கார்களில் ஆர்வம் காட்டுவதால் பழைய கார்கள் அப்படியே தேங்கி விடுகிறது.

கடந்த மூன்று நான்கு மாதங்களில் விற்பனை 50 விழுக்காடு வரை சரிவடைந்து உள்ளதாக கூறிய அவர் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதில் அரசு அனைத்து தரப்பினரையும் கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக இந்த மாதம் விற்பனை உயர்ந்திருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் விற்பனை மேலும் உயர்ந்து டிசம்பர் மாதத்தில் வாகன விற்பனை அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details