கரோனா காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமான துறை உள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து இன்னும் தொடங்காத நிலையில், உள்நாட்டு சேவைகளுக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சம், பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக விமானங்களில் பயணிக்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் முன்னணி விமான நிறுவனங்கள்கூட நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இந்நிலையில், குறைந்த விலையில் விமான சேவையை வழங்குவதில் பெயர்பெற்று விளங்கும் ஏர்ஏசியா நிறுவனம் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் மூன்று புதிய ஏர்பஸ் A320 Neo விமானங்களை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்தாண்டு ஏர்பஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் முதல் ஏர்பஸ் A320 Neo விமானத்தை இந்தாண்டு அக்டோபர் மாதமும் இரண்டாவது விமானத்தை இம்மாத தொடக்கத்திலும் பெற்றோம்.