தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வரும் மார்ச் மாதத்திற்குள் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்

டெல்லி: மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப சேவையான 5ஜி சேவைக்கான ஏலம் வரும் மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என தொலைத்தொடர்புத் துறைச்செயலர் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 26, 2019, 12:20 PM IST

BSNL
BSNL

தொலைத்தொடர்புத் துறைச்செயலர் அன்ஷூ பிரகாஷ் தலைமையில் துறைசார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்ஷூ பிரகாஷ் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலத் திட்டச் செயல்பாடுகள் குறித்துத் தெரிவித்தார்.

அதன்படி, மேம்பட்ட தொழில்நுட்பமான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஏலத்தின் மூலம் தொலைத்தொடர்புத் துறையின் நிதி, ஆரோக்கியமான நிலைமைக்குக் கொண்டுவரப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கி வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவை அளிக்க இன்னும் அரசு ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய அரசியலில் சொகுசு விடுதிகள்.!

ABOUT THE AUTHOR

...view details