நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி பகுதியில் உள்ள பெண்கள் சிலர் விசைத்தறி கூடத்தில் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.
அவர்கள் அவரது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி பகுதியில் உள்ள பெண்கள் சிலர் விசைத்தறி கூடத்தில் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.
அவர்கள் அவரது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகாரில், "எங்களது விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர், விசைத்தறி கூட வளாகத்தில் வசித்துவரும் பெண் தொழிலாளிடம் பாலியல் தொந்தரவு செய்தும், தகாத வார்த்தைகளால் பேசியம் வருகிறார்.
எனவே அவரிடமிருந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அப்பகுதியில் இருந்து தங்களது குடும்பங்கள் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
பின்னர், இந்த மனுவை பெற்றுகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இப்புகார் தொடர்பாக திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க உத்தரவிட்துள்ளதாக பெண்கள் தெரிவித்தனர். இது குறித்து விசைத்தறி உரிமையாளர் செல்வத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையிலே இருந்தது.