தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ராஜஸ்தான்: துப்பாக்கி முனையில் பெண் பாலியல் வன்புணர்வு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 27 வயது இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

By

Published : Jul 28, 2020, 9:07 PM IST

துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்: பாலியல் வன்புணர்வு செய்த கும்பலுக்கு வலை!
Rajasthan young woman gang rapped

தோல்பூர் மாவட்டம் தானா பகுதியைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கி முனையில் வைத்து கடத்திச்சென்றனர்.

பின்னர், அவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சாய்பாவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத கும்பலை தேடிவருகின்றனர்.

மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தோல்பூர் மாவட்டத்தில் இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூலை 26ஆம் தேதி 24 வயதான பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்தது.

ABOUT THE AUTHOR

...view details