தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2020, 9:17 AM IST

ETV Bharat / briefs

வேலூர் மாவட்டத்தில் புதிய நேரக்கட்டுப்பாடு அறிவிப்பு

வேலூர்: கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டத்தில் புதிய நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Velloer
Velloer

வேலூர் மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் கரோனா தீநுண்மியால் இதுவரை 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வேலூர் மாவட்டத்தில் கடைகள் இயங்க புதிய நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சில்லறை வியாபாரம் செய்யும் காய்கறி, மளிகைக் கடைகள்- திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலைவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

துணிக்கடைகள், ஹார்டுவேர் கடைகள், இதர கடைகள், நகைக் கடைகள் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைகள் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாள்களில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, பருப்பு, அரிசி, நவதானியம், காய்கறிக் கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் இரவு 10 மணி முதல் காலை ஆறு மணிவரை மட்டும் செயல்படும்.

உணவகங்கள், பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை செயல்படும். பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும்.

மருந்துக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உழவர் சந்தைகள் வழக்கம்போல் நாள்தோறும் செயல்படும்.

வாரச்சந்தைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை செயல்படும்.

வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அழகு நிலையங்கள், முடித்திருத்தும் நிலையங்கள், ஸ்பாக்கள் வரும் 30ஆம் தேதிவரை முற்றிலும் மூட உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட முழுவதிலும் உள்ள தேநீர் கடைகளில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் அவை முற்றிலும் மூட உத்தரவிட்டுள்ளது.

நேதாஜி சந்தை, மண்டித்தெரு மூடப்பட்டுள்ளதால் அதில் உள்ள கடைகள் தற்காலிகமாக மாங்காய் மண்டியில் செயல்படும்.

நேதாஜி சந்தை, மண்டித்தெரு, லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளிலில் கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கரோனா தீநுண்மி பரிசோதனை செய்து பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்பு தான் பணிக்கு வர வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details