தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வேளாங்கண்ணியில் காவலருக்கு கரோனா தொற்று ! - வேளாங்கண்ணி காவல் நிலையம்

நாகை : வேளாங்கண்ணியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று !

By

Published : Jun 26, 2020, 3:08 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 5 நாள்களில் 230ஆக அதிகரித்துள்ளது

இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், பணியாற்றி வந்த காவலருக்கு கரோனா தொற்றுநோய் இன்று (ஜூன் 26) உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிவொன்றுக்கு சென்று வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி ரத்த மாதிரிகள் நாகை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான காவலர் பணியாற்றிவந்த வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோவில் தெரு, ஆரிய நாட்டுதெரு, வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட பகுதிகள் சீல்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வேளாங்கண்ணியில் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சக காவலர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details