நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரும்பாக்கம் பகுதியில் வீரசோழன் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் பொதுப்பணித்துறை சார்பில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், படுக்கை அணை, வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்துதல், தண்ணீர் வெளியேறும் மதகுகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், வீரசோழனாற்றில் வந்தது. ஆற்றின் தடுப்பணையிலிருந்து கிளை வாய்கால்களான சேந்தவராயன், குறும்பகுடி வாய்கால்களுக்கு தண்ணீர் திற்நதுவிடப்பட்டது.