தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

30 வருட ஆக்கிரமிப்பு அகற்றி மைதானம் அமைப்பு! - வேடியப்பன் கோயில்

திருவண்ணாமலை: 30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்த வேடியப்பன் கோயிலின் 3.75 ஏக்கர் நிலத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மைதானம் அமைக்கப்பட்டது.

Vediyappan Temple Occupied Cleared
Vediyappan Temple Occupied Cleared

By

Published : Aug 13, 2020, 4:41 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், நம்மியந்தல் கிராமத்திலுள்ள, வேடியப்பன் கோயிலுக்குச் சொந்தமான குளக்கரையைச் சுற்றி 3.75 ஏக்கர் நிலங்களை கடந்த 30 வருடங்களாக அதே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.

தற்போது, ராந்தம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வருவாய் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன், ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

பின்னர் ஊராட்சி மன்றம், வருவாய் மற்றும் காவல் துறையினர் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மரக்கன்று நடும் ஊராட்சி நிர்வாகத்தினர்

மீதமுள்ள இடங்களில் ஊராட்சியின் சார்பில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், கிராம இளைஞர்கள் விளையாடுவதற்கு, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details