புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நால்களுக்கு முன்பு ஒரு பெண் தனது பெற்றோர்கள் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்டார் எனவும் அதனை பெற்றோர்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து எரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவரை அவரது பெற்றோரும், உறவினர்களும் கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண்ணின் காதலர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.