தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2020, 4:47 PM IST

ETV Bharat / briefs

சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கரோனா உறுதி!

திருவாரூர்: சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கணவன் - மனைவி இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Two corona positive cases in thiruvarur
Two corona positive cases in thiruvarur

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 52 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி சொந்த ஊர் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணவன் - மனைவி இருவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தல் வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்தது.

அதில், இருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 17 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details