திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 52 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி சொந்த ஊர் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணவன் - மனைவி இருவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தல் வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்தது.