நீலகிரி மாவட்டத்திற்கு குன்னூர் மலைப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவருகின்றன. அண்மைகாலமாக கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது அதிகரித்துவருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிவேகத்தில் வரும் வாகனங்களை நவீன கருவிகளை வைத்து போக்குவரத்துக் காவல் துறையினர் கண்டறிந்து அபராதம் விதித்துவருகின்றனர். இருந்தபோதிலும் ஒரு சில இடங்களில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.