தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2020, 5:16 PM IST

ETV Bharat / briefs

தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் கரோனாவால் உயிரிழப்பு

திருச்சி: தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் கரோனா தொற்று காரணமாக இன்று ( ஜூலை 2) உயிரிழந்தார்.

Puliyur Nagarajan died for Corona infection
Puliyur Nagarajan died for Corona infection

திருச்சி மாவட்டம் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் புலியூர் நாகராஜன் (65). இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில தலைவராக பதவி வகித்தார். திருச்சியில் விவசாயிகள் தொடர்பான பிரச்னைகளுக்காக அடிக்கடி ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டு போராடி வந்தார். மேலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மக்கள் குறைதீர் கூட்டம் போன்றவற்றில் விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

திருச்சிக்கு முதலமைச்சர் எப்போது வந்தாலும், அவரைச் சந்தித்து விவசாய நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சில நாள்களாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இன்று( ஜூலை 2) புலியூர் நாகராஜன் உயிரிழந்தார்.

இவரது மறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அபிராமி ஹோட்டல் என்ற பிரபல விடுதி உள்ளது. இதன் உரிமையாளரான முத்துகிருஷ்ணன் (93) கரோனா தொற்று காரணமாக திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூலை 1) உயிரிழந்தார். திருச்சியில் கரோனா தொற்று காரணமாக திருச்சியின் முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details