தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு! - திருப்பூர் இருசக்கர வாகனம் விபத்து

திருப்பூர்: ரங்கபாளையம் அருகே சொகுசு கார் ஒன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில், நான்கு நபர்கள் உயிரிழந்தனர்.

Accident
Accident

By

Published : Sep 20, 2020, 12:01 PM IST

Updated : Sep 20, 2020, 2:22 PM IST

Accident

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் இன்று காலை திருப்பூரிலிருந்து காங்கேயத்திற்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.

காங்கேயம் சாலை நாச்சிபாளையத்தை அடுத்த ரங்கபாளையம் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக அவர் கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருசக்கரம் வாகனத்தை ஓட்டி வந்த ரங்கபாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லிங்குசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், அவருக்கு பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூர் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த மிதுன், அவரது சகோதரி மெர்சிகா, தாய் ஜீவா ஆகிய மூவர் மீது மோதியதில் மிதுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மிதுனின் தாய் ஜீவா, தங்கை மெர்சிகா இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை அதிவேகமாக ஓட்டி வந்த மதன்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வந்த ஜீவா, மெர்சிகா ஆகியோர் தற்போது உயிரிழந்துள்ளதாக மருத்துவமனயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Sep 20, 2020, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details