தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சேலம் அருகே சாலை விபத்து: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு - உயிரிழப்பு

சேலம்: தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

By

Published : Jul 3, 2019, 10:27 AM IST

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் குடும்பத்துடன் நேற்று நாமக்கல் சென்ற பின், வாழப்பாடி வழியாக காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் ராஜ், கார் உரிமையாளர் சின்னப்பராஜ் மற்றும் பவுல்ராஜின் மனைவி ஆரோக்கிய மேரி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பவுல்ராஜ் வாழப்பாடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து வாழப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details