தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2020, 5:07 AM IST

ETV Bharat / briefs

புதுச்சேரியில் வெடிகுண்டுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது!

புதுச்சேரி : வெடிகுண்டு மற்றும் வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்த மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Three arrested for keeping bomb in pudhucherry
Three arrested for keeping bomb in pudhucherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால் பேட்டை காவல் துறையினர் நேற்று (செப்.23) அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்ததில் நாட்டு வெடிகுண்டு, வீச்சரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண், அருள், ராஜ் என்றும், இவர்கள் வெடிகுண்டு வீசி, கொலை செய்யும் நோக்கத்துடன் அப்பகுதியில் நேற்று அதிகாலை சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details