தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் வெளிமாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு! - இ.பாஸ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே அனுமதி

ஈரோடு: கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் இரண்டாவது நாளாக திருப்பி அனுப்பப்படுகின்றன.

கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் 2ஆவது நாளாக திருப்பி அனுப்பப்படும் வெளி மாவட்டத்தினர்!
கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் 2ஆவது நாளாக திருப்பி அனுப்பப்படும் வெளி மாவட்டத்தினர்!

By

Published : Jun 26, 2020, 4:38 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்கள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அந்த மாவட்டங்களுக்குள் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, நோய் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குள் செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயம் என்றும், மாவட்டங்களுக்குள் சென்று வர எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ள ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்குள் சென்று வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாவட்ட, மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள 134 சோதனைச் சாவடிகளிலும் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஈரோடு, நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கருங்கல்பாளையம் சோதனைச் சாவடியில் சோதனைக்காக 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாக அனுமதிச்சீட்டு கொண்டு வராதவர்கள் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

எல்லைப் பகுதியை கடப்பதற்கு போதிய காரணங்கள், அதற்குரிய ஆவணங்களை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, பிற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும், சோதனைச் சாவடியைக் கடக்கும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன் வாகனங்களில் செல்வோர் அனைவரும் பரிசோதனைக்குப் பிறகே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details