திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ், அந்தந்த பகுதி பொதுமக்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களை திமுக நிர்வாகிகள் வாங்கி வருகின்றனர்.
மாதந்தோறும் அந்த மனுக்களை மாவட்ட திமுக செயலாளர் ஆவடி ச.மு. நாசர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகிறார்.
அதன்படி இன்று செப்டம்பர் 14 மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், சுமார் 2000 மனுக்களை மாவட்ட திமுக செயலாளர் ஆவடி ச.மு. நாசர் வழங்கினார். குறிப்பாக மனுவில் திருவள்ளூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்ட திமுக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.