தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரியலூரில் இடி விழுந்து கோயில் கோபுரம் இரண்டாக பிளப்பு! - Ayyanar Temple

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே அய்யனார் கோயிலில் கலசத்தில் இடி விழுந்து கோயில் கோபுரம் இரண்டாக பிளந்து கலசம் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Temple tower torn in two by thunder in Ariyalur
Temple tower torn in two by thunder in Ariyalur

By

Published : Jul 26, 2020, 4:23 PM IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாழக்குறிச்சி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கருப்பசாமி, அய்யனார் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின்போது பலத்த இடி ஒன்று கோயில் கோபுரத்தின் மீது விழுந்துள்ளது.

மழையின் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளனர். இந்நிலையில், அய்யனார் கோயில் பூசாரி அண்ணாதுரை இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய வந்த போது, கோயில் கோபுரம் இடிந்து கலசம் கீழே விழுந்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஊர் பிரமுகர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஊர் பிரமுகர்கள் அங்கு வந்த பார்த்தபோது இடி விழுந்ததில் கோயில் கோபுரம் இரண்டாக பிளந்து சிதைந்து கோயில் கலசம் கீழே விழுந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: வீட்டில் 2 ஃபேன்கள், 4 பல்புகள்... பார்வைத் திறனற்ற தம்பதியினருக்கு ரூ.58 லட்சம் கரண்ட் பில்
!

ABOUT THE AUTHOR

...view details