மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வந்த கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அங்குள்ள காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், ஒரு எஸ்.ஐ. மூன்று காவலர்கள் என, நான்கு பேருக்கு கடந்த ஜூன் 27 ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.