தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2020, 11:17 AM IST

ETV Bharat / briefs

காவலர்கள் பிறந்த நாளுக்கு விடுமுறை: சென்னை ஆணையரைத் தொடர்ந்து நெல்லை எஸ்.பி. அறிவிப்பு

திருநெல்வேலி: காவலர்கள் தங்கள் பிறந்த நாளுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

SP Manivannan Ordered To Police can take a holiday for a birthday
SP Manivannan Ordered To Police can take a holiday for a birthday

தமிழ்நாடு காவல்துறையின் தென் மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரிந்து வரும் காவலர்கள், காவல் அலுவலர்கள் தங்கள் பிறந்த நாளுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தென் மண்டல காவல்துறை ஐஜி முருகன் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கடைபிடிக்கும்படி, அவர் அறிவித்திருந்தார். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் காவலர்கள், காவல் அலுவலர்கள் தங்கள் பிறந்த நாளைக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட காவலருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு பணிச்சுமைக்கு இடையே தங்கள் பிறந்தநாளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்ட ஐஜி முருகனுக்கு தென்மண்டல காவலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சாத்தான்குளம் சம்பவத்துக்கு பிறகு தென் மண்டலத்தில் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் தோறும் தென்மண்டல ஐஜி முருகன் நேரில் சென்று காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது காவலர்களுக்கு பிறந்த நாள் விடுமுறை அளித்திருப்பது தென் மண்டல காவல்துறை வட்டாரத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details