தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பேட்மிண்டன்: சாம்பியனார் சவுரவ் வர்மா! - சுலோவேனியா

சுலோவேனியா சர்வதேச பேட்மிண்டன் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை இந்திய வீரர் சவுரவ் வர்மா வென்றார்.

பேட்மிண்டன்: சவுரவ் வர்மா சாம்பியன்

By

Published : May 18, 2019, 10:29 PM IST

2019ஆம் ஆண்டுக்கான சுலோவேனியா சர்வேதச பேட்மிண்டன் ஓபன் தொடர், அந்நாட்டின் மெட்வோடி நகரில் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இந்திய வீரர் சவுரவ் வர்மா, ஜப்பானின் மினோரு கோகாவை (Minoru Koga) எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சவுரவ் வர்மா 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சவுரவ் வர்மா கடந்த ஆண்டில் நெதர்லாந்து, ரஷியா ஓபன் தொடர்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details