திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ளது மணியங்குறிச்சி செல்லாண்டி அம்மன் கோவில். இதன் பின்புறம் உள்ள மலையடிவாரப் பகுதியில் கட்டு சேவல் சண்டை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற புத்தாநத்தம் காவல்துறையினர், சேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றிவளைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோசிக்குறிச்சியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் முருகேசன் (43), செந்துறையைச் சேர்ந்த துரைச்சாமி மகன் செண்பகராஜ்(37), RS மணியாரம்பட்டியைச் சேர்ந்த வேல் மகன் கண்ணன் (35), வையம்பட்டி காந்திநகரைச் சேர்ந்த பொம்மநாயக்கர் மகன் சின்னச்சாமி (55),மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் (23),ஆனாங்கரைப்பட்டி பழனிச்சாமி மகன்கள் முருகேசன் (30), தமிழ்ச் செல்வன் (24) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.