பங்கு முதலீட்டாளர்களை கடந்த மூன்று தினங்களாக பாடாய் படுத்துகிறது இந்திய பங்குச்சந்தைகள். தொடர்ந்து இறங்கு முகத்தில் சென்று கொண்டே இருக்கிறது. மூன்றே நாள்களில் கிட்டத்தட்ட 2,000 புள்ளிகளை இழந்து தவிக்கிறது.
இதற்கு, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்படும் தொடர் சரிவு, பாண்ட் ஈல்டு, ஒமைக்ரான் மிரட்டல், வரவிருக்கிறது பட்ஜெட் இப்படி நிறைய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 634 புள்ளிகள் குறைந்தும், நிஃப்டி 181 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.