தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஒரத்தநாட்டில் மினி வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு! - Thanjavur Accident Dead

தஞ்சாவூர்: மினி வேன் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

School Boy Accident Dead In Thanjavur
School Boy Accident Dead In Thanjavur

By

Published : Jun 10, 2020, 9:52 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் மூரியர் தெருவை சேர்ந்தவர்கள் கலைச்செல்வன் (எ) வெங்கடேசன், ரேவதி தம்பதி. இவர்களுடைய மகன் ஹரிஷ் (7). இவர், ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று ஹரிஷ் வீட்டிலிருந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது கண்ணந்தங்குடி யில் இருந்து ஒரத்தநாடு நோக்கி சென்ற மினிவேன் ஹரிஷ் மீது மோதியது.

அதில், படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரத்தநாடு காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி வேன் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details