தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஓய்வுபெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை - ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக்கொலை

தஞ்சாவூர்: ஓய்வுபெற்ற 87 வயது ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற 87 வயது ஆசிரியர் வெட்டிக்கொலை

By

Published : Jul 1, 2020, 3:46 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ஐயர் வயது 87. அவர் தற்பொழுது நாச்சியார் கோயில் உத்திராபதி மடத்தின் பவர் ஏஜெண்ட் பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் கோபால் ஐயர் அவரது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த போது திடீரென வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த கோபால் ஐயர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கோபால் உடல் தற்பொழுது அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது கொலைக்கான காரணம் குறித்து நாச்சியார்கோவில் காவல் நிலைய காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரின் மகன் வாசுதேவன் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்பாளராக உள்ளார். குறிப்பாக கோபாலய்யர் மடத்தின் சொத்துக்களை பலரிடமிருந்து மீட்டுள்ளார். இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

அசம்பாவித சம்பவம் நிகழாமல் இருக்க அரசு மருத்துவமனை முன்பு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details