தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800ஐ தாண்டியுள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருதாச்சலம் வட்டாட்சியர் கவியரசு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் இழப்பு வருவாய்த்துறையினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.