12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இதையடுத்து, நடைபெறும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக் கோப்பையுடன், ரூ. 28 கோடி பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கோப்பை போன்ற மாதிரி கோப்பையை விழுப்புரத்தைச் சேர்ந்த நகை தொழிலாளி ஒருவர் தயார் செய்துள்ளார்.
விராட்டிகுப்பத்தில் வசித்து வரும் நகை தொழிலாளியான ரமேஷ் என்பவர், 0.020 மில்லிகிராம் தங்கத்தாலான உலககோப்பையை வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த குட்டி உலகக் கோப்பையை வடிவமைக்க 60 ரூபாய்தான் செலவாகியது என்கிறார் ரமேஷ். இந்த உலகக் கோப்பையின் உயரம், ஒரு அரிசியின் உயரத்தில் பாதிதான் உள்ளது.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய ரமேஷிடம் வைக்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்...
கிரிக்கெட் மீது அவ்வளவு ஆர்வமா?
'எனக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்ப்பேன். தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. நான் 0.020 மில்லி கிராம் தங்கத்தால் ஆன உலக கோப்பையை வடிவமைத்துள்ளேன்.
இதை தயார் செய்ய எவ்வளவு நேரம் ஆனது?