தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2020, 4:48 PM IST

ETV Bharat / briefs

ரயில் ரத்து: ஆன்லைன் முன்பதிவுக் கட்டணத்தை திருப்பிக் கொடுத்த இந்திய ரயில்வே!

ஊரடங்கு உத்தரவால் ரயிலில் பயணிக்க முடியாதவர்களின் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை, இந்திய ரயில்வே திருப்பிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ரயில்
ரயில்

ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாடு முழுவதும் மார்ச் 21ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மார்ச் 21ஆம் தேதி முதல் ஜுன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்து, பயணம் மேற்கொள்ளமுடியாதவர்களின் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருந்தது.

இந்நிலையில் மார்ச் 21ஆம் தேதி முதல் ஜுன் 30ஆம் தேதி வரை, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க முடியாதவர்களின் கட்டணத்தை இந்திய ரயில்வே திருப்பிக் கொடுத்துள்ளது.

பயணிகளுக்கு இந்திய ரயில்வே மொத்தம் 1,885 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details