தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஊரடங்கு மீறல்: 12 கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்! - விதி மீறல் செய்திகள்

சென்னை: மாநிலம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக கடந்த 83 நாள்களில் ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 484 பேர் கைதுசெய்யப்பட்டு,  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு மீறல்: 12 கோடியே 61 லட்சம் அபராதம் வசூல்!
ஊரடங்கு மீறல்: 12 கோடியே 61 லட்சம் அபராதம் வசூல்!

By

Published : Jun 15, 2020, 11:34 AM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவாமல் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு பல தளர்வுகளுடன் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியில் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 83 நாள்களில், ஊரடங்கை மீறியதாக ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 484 பேரை கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளதாகவும், நான்கு லட்சத்து 71 ஆயிரத்து 666 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து, இதுவரை 12 கோடியே 61 லட்சத்து 84 ஆயிரத்து 99 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details