ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அமெரிக்க கப்பல் விற்பனை செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு - America ship case

தூத்துக்குடி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலை விற்பனை செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவின் மீது விரைவில் முடிவெடுக்கவேண்டும் எனக் கோரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜுன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Postponement of lawsuit seeking sale of US ship
அமெரிக்க கப்பல் விற்பனை செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு
author img

By

Published : Apr 23, 2021, 12:13 PM IST

மதுரை: தூத்துக்குடி துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன் பிரவின் குமார்சிங், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்தமனுவில், "தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ‘அமெரிக்க சீமேன் கார்டு ஓகிய’ என்ற கப்பலை தருவைகுளம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கியூ பிரிவு காவல் துறையினர் கப்பலில் இருந்த 35 பேர் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கை, விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், கப்பலில் இருந்த 35 பேர் உள்பட அனைவருக்கும் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை அனைவரையும் விடுதலை செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 31.12.2019 வரை அமெரிக்க நிறுவனம் ரூ.2.91 கோடி வாடகை கட்டண பாக்கி வைத்துள்ளது. எனவே, கப்பலை விற்க அனுமதி கேட்டபோது அதற்கு தூத்துக்குடி நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, அமெரிக்க கப்பலை விற்க அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனுமீது விரைவில் முடிவெடுக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. இளங்கோவன், இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டுமெனக் கூறி மனு மீதான விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:கரோனாவா... அப்பிடின்னா? - விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் பேருந்துகள்

ABOUT THE AUTHOR

...view details