தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 16, 2020, 10:20 PM IST

ETV Bharat / briefs

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா!

பெரம்பலூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் அடக்கம் செய்தனர்.

Popular Front of India who buried the body of the deceased by Corona
Popular Front of India who buried the body of the deceased by Corona

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கரோனா தொற்றால் இன்று (ஆகஸ்ட் 16) உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆத்தூர் சாலையில் உள்ள இடுகாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் அபுதாகீர், சலாஹுதின், அகமது இக்பால், மற்றும் SDPl கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜகான், முஹைதீன் பாருக் ஆகியோர் முன்னின்று சுகாதாரத் துறையினர் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பு உடைகள் அணிந்து அடக்கம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details