தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2020, 5:06 AM IST

ETV Bharat / briefs

இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல் துறை - தற்கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே காவல் துறையினர் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததைக் கண்டித்து ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி, வாகனத்தைத் திருப்பித் தரும்படி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Police who confiscated a two-wheeler
Police who confiscated a two-wheeler

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஏறாவூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜா என்பவர், தமது இரு சக்கர வாகனத்தை பஜாரில் நிறுத்தி வைத்திருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், அவரது இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா காவல் துறையினரைக் கண்டித்து, தமது இரு சக்கர வாகனத்தைத் திருப்பித் தரக்கோரி, ஏறாவூர் பஜாரில் உள்ள செல்போன் டவரில் ஏறி, தற்கொலை செய்வதாகக் கூறி மிரட்டல் விடுத்தார். பின்னர் இதுகுறித்து கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், அவரது இரு சக்கர வாகனத்தைக் கொண்டு வந்ததையடுத்து, ஒரு மணி நேரப் போராட்டத்தைக் கைவிட்டு, ராஜா செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்து, தனது வாகனத்தைக் கொண்டு சென்றார்.

இதனால் இந்தச் சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details