தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - பஞ்சர் கடை உரிமையாளரை கொன்ற கும்பல்

நாகப்பட்டினம்: மேல வாஞ்சூர் அருகே பஞ்சர் கடை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
பஞ்சர் கடை உரிமையாளர் கொலை

By

Published : Jun 23, 2020, 4:05 PM IST

நாகப்பட்டினம் அடுத்த மேல வாஞ்சூரில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தவர் செந்தில். நரிமனம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், வழக்கம்போல் இன்று (ஜூன் 23) கடையை திறக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

நாகூர் கங்களாஞ்சேரி சாலை பூதங்குடி ஐ.ஓ.சி அருகே சென்றபோது, முட்புதர்களில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் செந்திலின் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை சரமாரியாக வெட்டியது. முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால், நாகூர் கங்களாஞ்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details