தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பரமக்குடியில் காவல் ஆய்வாளருக்கு கரோனா - மூடப்பட்டது காவல் நிலையம்

ராமநாதபுரம்: பரமக்குடி டவுன் காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

By

Published : Jun 28, 2020, 4:38 PM IST

 Corona Affected To Paramakudi PoliceI nspector
Corona Affected To Paramakudi PoliceI nspector

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 663 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 450 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தினசரி 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

கிராமம், நகரம் என அனைத்துப் பகுதிகளிலும் கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பரமக்குடி டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் 54 வயதுடைய காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது.

இதையும் படிங்க:மாவட்ட எல்லைகள் வரை பேருந்து இயக்கம்: சிரமப்படும் பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details