திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவாயல் ஏரியில் சவுடு மண் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததை அறிந்து கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு முறை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ,பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இன்று ஏரியில் மண் அள்ளுவதற்காக ஜேசிபி இயந்திரங்கள், காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கிராம ஏரியில் மண் அள்ளக்கூடாது எனக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.