காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல பூர்விகா செல்போன் விற்பனை நிலையத்தில் அதிக மக்கள் கூடியுள்ளதாகவும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனவும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அங்கு சென்ற நகராட்சி அலுவலர்கள், கடையில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர்