நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் வனப்பகுதியில் கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்கு பலரும் அத்துமீறி செல்கின்றனர்.
இந்த வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் அருவி அருகே செல்ஃபி எடுக்கும்போது தண்ணீரில் அடித்துச் சென்று உயிரிழந்தார். இதனால் இந்தப் பகுதியில் யாரும் நுழையக் கூடாது என வனத் துறையினரும் காவல் துறையினரும் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.