தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

By

Published : Jul 13, 2020, 9:32 AM IST

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.அரவிந்த் நேற்று (ஜூலை 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் இன்று பதவி ஏற்பு!
New superintend aravindh take charge in thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 12) புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.அரவிந்த் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.அரவிந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனைத்து காவல் துறை அலுவலர்களும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர் அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:குமரியின் 51ஆவது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

ABOUT THE AUTHOR

...view details