திருவள்ளூர் மாவட்ட பாஜக செயற்குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீதரன் கலந்து கொண்டார். அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், பாஜக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் ஸ்ரீதரன், "1967இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கையிலெடுத்து, திமுக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் தற்போது மொழிப் பிரச்னையை கையிலெடுத்து திமுக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறது.