தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 6, 2020, 5:07 PM IST

ETV Bharat / briefs

திருச்சியில் 2 வயது குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை!

திருச்சி: குடும்ப தகராறு காரணமாக இரண்டு வயது குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother commits suicide by setting fire to her son in Trichy
Mother commits suicide by setting fire to her son in Trichy

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 30). இவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரஞ்சனா (22) என்ற மனைவியும், இரண்டு வயதில் கமலேஷ் (2) என்ற குழந்தையும் இருந்தனர். வேல்முருகன் தனது மனைவி, குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே, பணி நிமித்தமாக கடந்த மாதம் வேல்முருகன் தருமபுரிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், குளியலறையில் ரஞ்சனா தனது மகனுடன் இன்று (செப்டம்பர் 6) தீக்குளித்தார். பின்னர், இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அங்கு தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details