தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

500 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ! - மாற்றுத் திறனாளிகள் 500 நபர்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள்

மதுரை: தவழும் மாற்றுத் திறனாளிகள் 500 நபர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வழங்கினார்.

500 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண பொருள்களை வழங்கிய எம்எல்ஏ
500 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண பொருள்களை வழங்கிய எம்எல்ஏ

By

Published : Jun 18, 2020, 5:33 PM IST

கரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தாலும் ஏழை, எளிய மக்கள் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர். ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் பகுதிகளில் வசிக்கும் தவழும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு அதிமுக சார்பாக, கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்க திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டது.

நிவாரணப் பொருள் வாங்குவதற்காக வந்த தவழும் மாற்றுத்திறனாளிகள் 500 நபர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு, நிவாரணப் பொருள்களை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details