ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரம் பகுதியில் மீன்பிடி தடை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 800க்கும் அதிகமான விசைப்படகுகளில் ராமேஷ்வரம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க்ச் சென்றனர்.
ராமேஷ்வரத்தில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயம் - கடலோரக் காவல் படை விசாரணை - Missing Fishermen who went fishing in Rameshwaram
ராமேஷ்வரம்: விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் மாயமானதை அடுத்து அவர்களைத் தேடும் பணியில் சக மீனவர்களும், கடலோரக் காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
![ராமேஷ்வரத்தில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயம் - கடலோரக் காவல் படை விசாரணை Missing Fishermen who went fishing in Rameshwaram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:50-tn-rmd-03-fishermen-missing-visual-script-7204441-15062020173121-1506f-02117-544.jpg)
இதில், ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த் ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள், நேற்று இரவு வரை கரை திரும்பாததால், அவர்கள் குறித்து இந்திய கடலோரக் காவல் படையினருக்கும், காவல் துறையினருக்கும் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடலோரக் காவல் படையினர், ஓவர் கிராஃப் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ராமேஷ்வரம் மீன் துறைமுகத்தில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் 10 மீனவர்களும், இவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.