தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததை அடுத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஜூலை 12) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர், கிராமப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
அத்தியாவசிய கடைகளான மருந்துக் கடைகள் போன்றவை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள போதும், விருதுநகர் மாவட்ட மருந்துக் கடைகள் சங்கத்தின் சார்பில் முழு ஊரடங்கில் பங்கேற்கும் வகையில் அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.