சேலம் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஆக.25) சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள பொதுமக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கவும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காய்ச்சல், சளி அறிகுறி இருப்பவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு வாகன மருத்துவகுழு சேவையை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.