தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2020, 4:38 PM IST

ETV Bharat / briefs

'சாண்டி மனைவியை விட்டுவிடுங்கள்'- காஜல்

சாண்டியையும், அவரது மனைவியையும் தனியாக விட்டுவிடுங்கள் என்று நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.

சாண்டி
சாண்டி

'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் 'சாண்டி'. இவருக்கும், நடிகை காஜல் பசுபதிக்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து சாண்டி சிந்தியா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சாண்டி சமீபத்தில் தன் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதைக்கண்ட நெட்டிசன் ஒருவர், சாண்டியின் மனைவியை காஜலுடன் ஒப்பிட்டு அவதூறாகப் பேசியுள்ளார். இதைக் கண்டு கடுப்பான காஜல், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தயவுசெய்து சாண்டியையும்; அவரது மனைவியையும் தனியாக விடுங்கள். இதுகுறித்து நான் எத்தனை முறைதான் சொல்வது என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நாங்கள் பிரிந்ததற்குக் காரணம் நான் மட்டுமே. சாண்டி மீது தவறு இல்லை.

நாங்கள் இருவரும் 2012ஆம் ஆண்டு பிரிந்துவிட்டோம். எங்களுடைய விவாகரத்திற்கும் சாண்டியின் மனைவிக்கும் சம்பந்தமே இல்லை. சாண்டி தற்போது எனக்கு கணவரும் இல்லை" என்றுப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details