இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை மூலம் செயல்படும் தமிழ்நாடு அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் தாய்-சேய் பாதுகாப்பு வாகன சேவையில் பணிபுரிய ஓட்டுநர் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கீழ்க்காணும் தகுதியுடைய ஓட்டுநர்கள் வருகின்ற 20ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ச் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் நிறைந்திருக்க வேண்டும். உயரம்: 162.5 செ.மீ, வயது வரம்பு: 25 முதல் 40 வயதுவரை.