தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கோவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோயம்புத்தூர்: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 224 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

By

Published : Aug 3, 2020, 12:47 AM IST

Increase in the number of people recovering from corona in Coimbatore
கரோனா பாதிப்பு

கோயம்புத்தூரில் இன்று (ஆகஸ்ட் 2) 167 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 230ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 224 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 469ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவர்களை விட குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கோவையில் இதுவே முதல் முறையாகும்.

ABOUT THE AUTHOR

...view details