உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவருகிறது. மூன்றாம் கட்டப் பரவலை எட்டியிருக்கும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு பொது முடக்கம் கடும் விதிகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், விதிமுறைகளை மீறி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 5) சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதலே மதுப் பிரியர்கள் கூடுதல் விலை கொடுத்து மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.